தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நம்முடைய அம்மா அவர் இல்ல அலுவலகமாக பயன்படுத்தியது கொடநாடு. அந்த கொடநாட்டில் நடைபெற்ற கொலை – கொள்ளை இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னாலும் அதற்கு உரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்று நம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடன்…

தமிழகத்தில் இருக்கின்ற அமைப்பு ரீதியான மாவட்ட கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதை வெற்றிகரமான ஆர்ப்பாட்டமாக நீங்கள் நடத்திக் காட்டினார்கள் என்பதையும் இந்த நேரத்திலே நினைவுகூர்ந்து,  அதற்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டம், திருச்சி கூட்டம் தொண்டர்கள் நம் பக்கம் தான் என்பதை நாம் நிரூபித்துக் காட்டினோம்.

கொடநாடு கொலை – கொள்ளை விசாரணையை துரிதப்படுத்தி,  அதற்கு காரணமானவர்கள்   மட்டுமல்லாமல், பின்பலமாக இருந்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று நாம் எழுப்பிய கோரிக்கை வலுவான கோரிக்கை …தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுடைய கவனத்தையும்  ஈர்க்கின்ற ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.

நம்முடைய பக்கம் நியாயம்  இருக்கின்றது என்பதை தொண்டர்களும்,  தமிழக மக்கள் அனைவரும் அறிந்து, இன்றைக்கு நம்மை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இவளோ பெரிய ஆர்ப்பாட்டம், இவளவு பெரிய ஆதரவு இன்றைக்கு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லை என்பதனை நாம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாம் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.