ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாகவும் மற்றும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று காலை குறைந்த அளவு மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் வளத் துறை அலுவலகத்திலோ அல்லது கடலோர போலீசாரிடமோ எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை.