திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவரணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூவரும் சேர்ந்து செய்ய வேண்டியனும். இதுக்கு  திமுகவினுடைய பொறுப்பில் இருக்கிற கிளைச் செயலாளராக இருந்தாலும்….. நகரச் செயலாளர்களாக இருந்தாலும்…. ஒன்றிய செயலாளர்களாக இருந்தாலும்…. எல்லோரும் சேர்ந்து இதை செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

அனைவரும்  ஒருங்கிணைத்து இதை செய்ய வேண்டும். அதை செய்தால் தான்  சிறப்பாக செய்ய முடியும் என்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.மாணவர்களிடம் தான் அதிகமாக வாங்கணும். அவங்க தான் விஷயம் தெரிஞ்சவங்க. அதே மாதிரி ஊர்ல இருக்குற பெற்றோர்கள் கிட்டயும் நீங்க வாங்கணும். இரண்டையும் செய்து….  நாம் முன்பே சொன்னது மாதிரி இலக்கை அடைவதற்கு நீங்கள் எல்லோரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு நான் வேண்டி கேட்டு கொள்கின்றேன்.

மாநாடு எந்த அளவுக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். ஆக இளைஞர் அணி அவங்க வந்துருவாங்க அப்படின்னு எல்லாம் இருக்கக்கூடாது. நீங்களும் உடனடியா கழகத்திலே இருக்கிற பொறுப்பாளர்கள்… அணி அமைப்பாளர்கள்… எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வரணும்…  பனியன் எல்லாம் வந்திருக்கு. அதை நீங்கள் அணிந்து விழுப்புரம் தெற்கு மாவட்டம் என்ற முத்தரையோடு….  நீங்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து சேர வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.