மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதீத மழை பொழிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வாகனங்கள், வீடு மற்றும் கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது.

இந்த நிலையில் புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் கடன் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சாலையோர வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.