ஜெயலலிதா பற்றி கே எஸ் ரவிக்குமார் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே எஸ் ரவிக்குமார், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியது தான் என்று கூறினார்.

ஆனால் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஜெயலலிதாவை தெரியும் எனவும் அதனால் அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாகவும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெயக்குமார், கே எஸ் ரவிக்குமார் தெருவில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.