அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அந்த காலத்துல இருந்து நான் அரசியலில் பயணிச்சிட்டு இருக்கேன்… என்னை  தொடர்ந்து 1996இல்  இருந்து பார்த்தவங்களுக்கு தெரியும்… அதுக்கு முன்னாடி கலை உலகத்துல இருந்து எவ்வளவு உதவி பண்ணியிருக்கேன்னு பொள்ளாச்சியில் போய் கேட்டு பாருங்க…

கோபிசெட்டிபாளையம் போய் பாருங்க….  அதனால நீங்க என்ன பண்ணனும்னா..? சரத்குமார் எவ்வளவு தூரம் பண்ணி இருக்காருன்னு சொல்லி பாருங்க, மக்களுக்கு தெரியும்,  அவங்களுக்கு தெரியும்….  அவங்களுக்கு தெரிகின்ற காலம் வருவதற்கு நீங்கதான் உதவி பண்ணனும.  ஏன்னா நான் உங்க குடும்பத்தை சேர்ந்தவன் தானே என பேசினார்.

திரைப்படங்களில் அதிகமாக நடிக்கிறீர்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார்,

ஆமாம்..! அதிகமாக  பணம் வேணும்ல,  அரசியல் கட்சி நடத்துவதற்கு... எனக்கு யாரும் கொடுத்து வைக்கவில்லையே பாஸ்…  எனக்கு பணமா கொடுத்து வச்சி இருக்காங்க. நான் உழைக்கணும்,  சம்பாதிக்கணும்… கட்சி நடத்தணும்…. பொது வாழ்க்கையை கவனிக்கணும்.. எல்லாருக்கும் உதவி பண்றதுக்கு  நான் என்ன 30,000 கோடியா வச்சிருக்கேன்…  அவ்வளவு இல்லையே என்கிட்ட…  அவ்வளவு இருந்தா நிறைய அள்ளி வீசி இருப்பேன் இல்ல.  அது கூட இருக்காது,  ரெண்டே நாள்ல தொலைச்சிருப்பேன்…   அவ்வளவு தாராள குணம் படைத்தவன் நான். வாய்ப்பு கொடுத்து பாருங்க,  தமிழகத்தை மாற்றி காட்டும் சக்தி படைத்தவன் நான்.

இந்தியா கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், 

இந்தியா கூட்டணி தான் உடைஞ்சிட்டு இருக்கே பாஸ்….  ஒரு கருத்து வேறுபாடு வந்துட்டு இல்ல…    உறுதியா இருக்காங்கனா யாரும் பிரியாம இருந்தா கடைசி வரைக்கும் ஒரு டென்ஷன்ல இருந்திருக்கும். இப்ப அவர் பிரிஞ்சிடுறாரு… ராஞ்சியில் ஒரு கைது அப்படின்னு வந்ததால், சின்னதா  ஒரு கலக்கம் எல்லாருக்கும் வருதுல்ல என பேசினார்.