வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக  அவரது மனைவி கயல்விழியுடன் வந்தார். காவல்நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அண்ணியையும் அழைத்துவர என்ன காரணம் என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,

அண்ணி அவ புருஷனுக்கு ஒன்னுனா வராம என்ன பண்ணுவா ? அவ வருவா…  நான் வாரேன்னு சொன்னா … நானும் வான்னு கூப்பிட்டு வந்துட்டேன், அவ வழக்கறிஞர்.அவ வாழ்க்கையில் பாதி அழிச்சதுல எனக்கும் ஒரு பங்கு இருக்குல்ல…

அவ IAS ஆக வேண்டியவள். என்னை கட்டிட்டா… சரி வக்கீலுக்காவது படிக்கிறேன்னு சொன்னா… சரி படின்னு சொன்னேன். நான் தான் உன் வழக்குக்கு ஆஜராவேன்னு சொன்னால்… வக்கீலாக  வந்து  மனைவி உங்களுக்கு ஆஜராக முடியாது என சொன்னாங்க.. சரி வா சும்மாவாவது வந்து நில்லுன்னு கூப்பிட்டு வந்தேன் என தெரிவித்தார்.