மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி OPS மகன் ரவீந்தரநாத் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க கோருவதாக கூறப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி தரப்பில் விவாகரத்து கோரப்படவில்லை. தொடர்ந்து, ரவீந்தரநாத் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.