கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து லட்சுமியும், உறவினர்களும் கதறி அழுதனர்.

நேற்று காலை கணவரின் இறப்பை தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்த லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடங்குகளை செய்து சின்னத்தம்பி உடலை அடக்கம் செய்த இடத்திற்கு அருகிலேயே லட்சுமியின் உடலையும் உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.