கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பால்குளத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் ஒரு பெண் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் இறங்கி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அந்த பெண் மஞ்சாகுழி பகுதியைச் சேர்ந்த விசிலா என்பது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.