கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்து ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதலே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்றனர்.

ஆனால் 200 பேருக்கு மட்டுமே பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுக்கும் நிலையில் ஹோட்டலில் முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி 10 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.