நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலை ராஜா பவானி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். இதனைyaடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.