திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பக்கம் பட்டியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் இந்த செடியில் பூ பூத்தது.

இந்த பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். ஒரே செடியில் 5 பூக்கள் பூத்தன. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பிரம்ம கமலம் பூவை பார்த்து ரசித்தனர். இதனையடுத்து பூவுக்கு தேங்காய், பழம் வைத்து சிவக்குமாரும், அவரது குடும்பத்தினரும் வழிபட்டுள்ளனர்.