விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானார் பேருந்து கார், மோட்டார் சைக்கிள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் விழுப்புரம் பைபாஸில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.