கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு பசுபூஜை, சுப்ரபாத சேவை நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து பெருமாள் சர்வ அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், கமலா பல்ப் சென்டர் வைத்திலிங்கம், எஸ்.கே ஸ்கின் கிளினிக் டாக்டர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டு சாமியின் அருள் பெற்றனர்.