கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சராபாளையம் சாலையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 35 அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புடவைகள், மர சிற்பங்கள், உணவு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை க்கு வைக்கப்பட்டிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். எனவே பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினரின் பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.