ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 1,757.56 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இழப்பீடு தொகை 3.04 கோடி ரூபாய் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.