விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மரக்காணம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேசன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.