அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர மாவட்ட கழக பொருளாளர்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 51 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் 31 ஆண்டு நம் அனைத்திந்திய அண்ணா திராவிட ஆட்சி நடைபெற்று இருக்கின்றது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இயக்கம் 1972, 1977 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்று வந்தது. புரட்சித்தலைவர் அவர்கள் தமிழ் மக்களுக்கு பல நல்ல உதவி திட்டங்களை செய்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மறைவுக்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு,  1991-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பிற்கு வந்தார்கள். இதய தெய்வம் அம்மா அவர்கள் ஆட்சி அமைந்த பிறகு தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றி,

எனக்கு பின்னால் 100 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்று இரும்பு கோட்டையாக மாற்ற சூளுரைத்த  புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நம்மை எல்லாம் துயரத்தில் ஆழ்த்தி விண்ணுலகத்தை ஆளச் சென்றார்கள்.

அதன் பிறகு இயக்கத்தை எதிரிகளும்,  துரோகிகளும் சூழ்ச்சியாக அழிக்க  நினைத்த பொழுது,  எங்களையெல்லாம் காப்பாற்ற வந்த சாமி புரட்சி தமிழர்… எடப்பாடி பழனிச்சாமி… துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி நாலரை ஆண்டு காலம் அம்மாவின் ஆட்சியை பொற்காலமாக தமிழக மக்களுக்கு தந்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இதய தெய்வம் அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களாக கொடுத்து சென்றார்கள். இன்றைக்கு நம்முடைய எதிர்கட்சித் தலைவர் கழகத்தின் பொதுச்செயலாளர்… நாளைய முதல்வர்…. 2 கோடி தொண்டர்களாக மாற்றி கட்சியை வளர்த்து எடுத்து இருக்கிறார்.