AIADMK  துவங்கப்பட்ட நேரத்தில்  இயக்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என EX MLA அண்ணாதுரை பேசினார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை மாநகர் மாவட்ட அவை தலைவரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாதுரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்த 52 வது ஆண்டு விழாவை கொண்டாட கூடிய நேரத்தில் நிச்சயமாக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே நாம் ஒரு சபதம் எடுக்க வேண்டும்.

நம்முடைய கழகத்தினுடைய நிறுவன தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தீய சக்தியை தமிழ்நாட்டிலே அழித்தொழிக்க வேண்டும் என்ற  மகத்தான நோக்கத்தோடு தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் தமிழ்நாட்டிலே… இந்தியாவிலே எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது, காங்கிரஸ் கட்சி இருக்கின்றது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இப்படி ஏராளமான அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்திலே மாநில கட்சிகளாக இருக்கிறது. இதில் எந்த கட்சிக்கும் இல்லாத ஒரு மிகப்பெரும் பெருமை ADMKவுக்கு இருக்கு.

இந்தியாவிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கக்கூடிய பெருமை வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லை. நான் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ?  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்குகின்ற நேரத்தில்.. துவக்கப்பட்ட நாளில்…

இந்த இயக்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த ரத்த வெள்ளத்திலே மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தவர்களே அழிந்தார்களே ஒழிய,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மகத்தான வெற்றி வாகை சூடக்கூடிய ஒரு இயக்கமாக..  இந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.