நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கட்டிடம் பராமரிப்பு பணி செய்யப்பட்டது.

தற்போது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் எந்த நேரமும் இருந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ஆபத்தான பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்கள்  மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.