நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை திருடவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பூமணி தகாத வார்த்தைகளால் பாவாயியை திட்டி தன்னுடைய கையில் வைத்திருந்த பாட்டிலால் அவரது வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாவாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாவாயி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பூமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.