தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் பற்றி வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் உளவியல் வல்லுநர் கருணாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பயறு அதிசயம் என்னும் கலவை பயிறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பயறு வகைகளுக்கு தேவையான மணி, சாம்பல் சத்துக்கள், இரும்பு, இலை மற்றும் போரான் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் ஆக்ஸிஜன் என்னும் பயிர் ஊக்கி போன்றவற்றை இந்த மருந்து உள்ளடக்கியுள்ளது.

மேலும் பயிறு வகை பயிர்களில் பூ பூக்க தொடங்குவதற்கு முன்பாக பயறு அதிசயம் என்ற இந்த கலவையை ஏக்கருக்கு இரண்டு கிலோ என்னும் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலமாக 10 முதல் 20% வரை அதிக உற்பத்தியினை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் பயிர் ஊக்கியை உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு டிஏபி கரைசலுக்கு மாறாக பயன்படுத்திக் கொள்ளலாம். பருத்தியில் காய் முழுமையாக வெடிக்காமல் பஞ்சு மகசூல் குறைகிறது. அதேபோல் பருத்தியில் பூ மற்றும் சப்பைகள் உதிர்வதால் மகசூல் குறைபாடு ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கு பருத்தி பிளஸ் என்னும் நூன்சத்து வளர்ச்சி ஊக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து நிலக்கடலை ரிச் என்ற கலவை ஏக்கருக்கு இரண்டு கிலோ என்ற அளவில் பூப்பூக்கும் மற்றும் இரண்டு கிலோ என்ற அளவில் காய் பிடிக்கும் பருவத்தில் இலை வழியாக 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலமாக பூ பிடிக்கும் திறன் அதிக மகசூல் 15 சதவீதம் வரை கூடுகிறது. இதனையடுத்து தென்னை மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்து காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்க தென்னை டானிக் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டானிக்கை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேர் மூலமாக செலுத்தினால் மரங்கள் செழிப்பாக வளர்ந்து உயர் விளைச்சல் கொடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.