கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் முதல் மணக்குடி வரையிலான சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேற்று சாலை பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் சாலை பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.