திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் வேலைகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், உண்டார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு கொடுக்கும் சிற்றுண்டியை ருசி பார்த்து தரத்தை அறிந்து கொண்டார். மேலும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் எடுக்கிறார்கள் என பள்ளி குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.