மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். பாடகையான கவிதா இசை குழு மூலமாக மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக் செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கவிதா ரத்தம் கக்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.