கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சரிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.