நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பொதுமக்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் போலீசாரிடம் புகார்களை தெரிவிக்கலாம். குற்றங்களை தடுக்க போலீஸ்சாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களது குறைகளையும் புகாரையும் தெரிவிக்க எஸ்.பி-யுடன் பேசுங்கள் 8428103090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.