திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேகலிங்கபுரத்தில் பகவதியப்பன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பகவதியப்பன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பகவதியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.