ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் அருகே கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் முன்பகுதி சேதமானது.

மேலும் 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.