கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ராஜேஷ் கீரப்பாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ராஜேஷின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.