விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பூபாலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.