வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வெங்கடேசபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக ஒருவரை சந்தித்து விட்டு வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரது மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் குடியாத்தத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனால் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவன் மறைத்து வைத்திருந்த 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.