காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.

அதன் படி இந்த ஆண்டு 23-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதனையடுத்து காலை 7 மணி அளவில் கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வருவார். வைகுண்ட ஏகாதேசி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.