திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கைவண்டர் கலைஞர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம், 2 லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.