சிறுவர்கள் விளையாட்டாகச் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பெரியவர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறிய குழந்தையை, அங்கு நின்றிருந்த ஒரு நபர் தனது காலால் எட்டிப்பிடித்து, தரதரவென நிலத்தில் இழுத்துச் சென்று, மிகுந்த ஆத்திரத்தோடு தரைமட்டமாகத் தூக்கி வீசியுள்ளார். இந்த மனிதநேயமற்ற வெறிச்செயல் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரின் ரத்தத்தைக் உறைய வைத்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியிலேயே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுவன் கடையின் அருகாமையில் பட்டாசு ஒன்றை கொளுத்திப் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட நபர், குழந்தையிடம் பேசி அறிவுறுத்தவோ அல்லது கண்டிப்போ செய்யாமல், உடனடியாகத் தன் மிருகத்தனமான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பிஞ்சு குழந்தை அலறித் துடித்த போதிலும், சிறிதும் இரக்கமின்றி அதைத் தரையில் இழுத்து எறிந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய அந்த நபரிடம் இதுகுறித்து விசாரிக்கப்பட்ட போது, “அந்தச் சிறுவன் என் வேலை செய்யும் இடத்தைக் குறிவைத்து பட்டாசை கொளுத்திப் போட்டான், அதனால் தான் இப்படிச் செய்தேன்” என்று தனக்குத்தானே நியாயம் கற்பித்துச் சாக்குப்போக்கு கூறியுள்ளார்.
ஆனால், ஒரு சிறிய குழந்தை செய்த விளையாட்டுத்தனமான தவறுக்கு, உயிரக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை நடத்தியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
كاميرا مراقبة توثق لحظة إمساك شخص بطفل بقدمه وسحبه وطرحه ارضاً بعىىنف!
الرجل برر فعله بدعوى قيام الطفل برمي مفرقعة نارية (توربيل) تجاه محل عمله. pic.twitter.com/JSXjQ3OqiJ— • (@SULTAN_SS05) July 27, 2026
“>
