தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு குறித்து மட்டுமே அதிகம் பேசப்படும் நிலையில், படத்தின் வெற்றிக்காகத் திரைக்குப் பின்னால் கடுமையாக உழைக்கும் மக்கள் தொடர்பு அலுவலர்களின்  முக்கியத்துவம் குறித்து யாரும் பேசுவதில்லை எனத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சினிமா சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பி.ஆர்.ஓ-க்களின் பங்கு மிக அவசியமானது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “ஒரு படத்தின் உண்மையான முதுகெலும்பாக  விளங்குபவர்கள் பி.ஆர்.ஓ-க்கள் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசுகிறோம்; இவ்வளவு உழைப்பைக் கொட்டும் பி.ஆர்.ஓ-க்களின் பங்களிப்பை மட்டும் பலரும் பேசுவதேயில்லை” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“>

 

சினிமா துறையில் ஊடகங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் பி.ஆர்.ஓ-க்களின் கடின உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் குறித்தும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.