உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். ட்விட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த எலன் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர் 7500 ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 1700 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகில் பல்வேறு இடங்களில் ட்விட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்விட்டர் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

twitter செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் இதை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ட்விட்டர் பயனர்கள் தங்களின் போஸ்டர்கள் தெரியவில்லை என்றும் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக Try Again என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ட்விட்டர் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.