ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை பகுதியில் விவசாயியான கிட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஓலை குடிசையில் தங்கள் வளர்த்து வரும் 7 ஆடுகளை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தம் போட்டதால் தம்பதியினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது குடிசை தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானதோடு, ஏழு ஆடுகளும் உடல் கருகி இறந்தது. இதுபற்றி அறிந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.