ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலைச்சரிவில் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உயர் அதிகாரிகளும், கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த யானையின் உடலை பார்வையிட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, இறந்து கிடப்பது 30 வயதுடைய பெண் யானை அந்த பகுதியில் இருக்கும் ஓடையில் தண்ணீர் குடித்துவிட்டு மலைச்சரிவில் ஏறி சென்ற போது எதிர்பாராதவிதமாக யானை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மை காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.