கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மின்மீட்டரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின்விநியோகம் நடைபெறும் மின் கம்பிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.