தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற இந்த சந்தனக்கூடு விழாவை காண அனைத்து தரப்பு மக்களும் வருகை தருவார்கள் என்பதால் தொடர்ந்து 14 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பங்கேற்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.