மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த தண்டபாணி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.