தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் மினி லாரியை ஓட்டி சென்ற டிரைவர் உடனடியாக கீழே இறங்கி விட்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி லாரியில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் மினி லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.