சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமன்னன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ஆம் தேதி குடிபோதையில் நின்று கொண்டிருந்த அபிமன்னனுக்கும் கருணாநிதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருணாநிதி வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது ஊற்றினார்.

ஆனால் குடிபோதையில் மருத்துவமனைக்கு சொல்லாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் அபிமன்னனின் கை அழுகியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபிமன்னனின் தாய் பழனியம்மாள் தனது மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிமன்னன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான கருணாநிதியை தேடி வருகின்றனர்.