தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சகிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முரளி தனது இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை குடித்து தானும் அதை குடித்து மயங்கி விழுந்தார்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தர் உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் முரளிக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.