திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது.

இதனை பார்த்ததும் சித்ராதேவி தனது மகன், மகளுடன் காரை விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார்த்தி பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்