நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர்.