மக்களவை மற்றும் அரசியல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வரும் உலகநாயகன் கமல் ஹாசன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் தோன்றவில்லை.

இதற்கிடையில், அன்பறிவ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘KH237’ திரைப்படம் சிஜி பணிகள் காரணமாகத் தற்காலிகமாகத் தாமதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், ‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் தனது அடுத்த புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் திரை வட்டாரத்தில் செய்திகள் கசிந்துள்ளன.

இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும், விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898 AD இரண்டாம் பாகம் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய முதல் பாகத்தில் சுப்ரீம் யஸ்கின் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்த கமல், இரண்டாம் பாகத்தில் முழுமையான மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான படப்பிடிப்பில் பிஸியாகி வருகிறார்.நெல்சன் இயக்கத்தில் பல தசாப்தங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் கமல் இணையவுள்ள ‘KHxRK’ படத்தின் படப்பிடிப்பு, அருண்குமார் உடனான படம் முடிந்த பின்னரே தொடங்கும் எனத் தெரிகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘செயோன்’ ஆகிய படங்களையும் கமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

“>

 

அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வந்தாலும், அடுத்தடுத்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ள கமலின் லேட்டஸ்ட் சினிமா லைன்-அப் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.