திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிணத்துப்பட்டியில் விவசாயியான ஆண்டி அம்பலம் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று ஆண்டிக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பசுமாடு எதிர்பாராதவிதமாக தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தது.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 12 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆண்டி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.